என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிதி நிறுவன அதிபர்"
- சோதனையில் வெவ்வேறு அறைகளில் 4 கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பல லட்ச ரூபாய் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
- தேர்தல் நேரத்தில் நிதி நிறுவனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும் இடங்களில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் பணம், நகைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன்படி வருமான வரித்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கி உள்ளனர். முறையாக வரி செலுத்தாதவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பவர்கள் பட்டியலை சேகரித்து அவர்களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் புகார் தெரிவிக்கப்படும் இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி தேர்தல் பறக்கும் படையில் ரூ.10 லட்சத்திற்கு மேல் சிக்கினால் அது குறித்தும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் நாமக்கல் ஈ.பி.காலனியில் வசித்து வருபவர் செல்லப்பன் (வயது 60). தனியார் நிதி நிறுவன அதிபரான இவர், டேங்கர் லாரியும் வைத்துள்ளார். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இதனிடையே நேற்று வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான பணத்தை நிதிநிறுவன அதிபர் செல்லப்பன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கலைச்செல்வன், அயாஸ்கான் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசாரும் தொழில் அதிபர் செல்லப்பன் வீட்டிற்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வெவ்வேறு அறைகளில் 4 கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் பல லட்ச ரூபாய் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த 7 பேர் கொண்ட நாமக்கல் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் 4 பைகளில் இருந்த ரூபாய் நோட்டுகளை எந்திரம் மூலம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.80 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளும் தங்களுடைய பங்களிப்பாக வீடு முழுவதும் தங்களுக்குரிய பாணியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். வீட்டின் குடிநீர் தொட்டி, பூஜை அறையை திறந்து பார்த்தனர். காலி சிலிண்டரை ஆய்வு செய்தனர். மேலும் வீட்டின் கீழ் தளம், மேல் தளத்தில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் பீரோ, கட்டில், மெத்தை, பாத்திரங்கள், சமையல் அறையில் உள்ள பொருட்கள், அரிசி பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றை திறந்து பார்த்தனர். இதில் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் ரூ.45 லட்சம் கட்டுகட்டாக இருந்தது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டனர். அதற்கு எந்த ஆவணங்களும் இல்லை என தெரிவிக்கவே அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சோதனையின்போது பீரோவில் நிறைய சொத்து ஆவணங்கள் இருந்தன. அவற்றை எடுத்து ஆய்வு செய்தபோது அவை ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் என தெரியவந்தது. இதற்கு உரிய வருமான வரி செலுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் கேட்டனர். இதையடுத்து அந்த சொத்து ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் செல்லப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இதைத்தவிர வேறு இடங்களில் சொத்து, நிறுவனங்கள், கடைகள் உள்ளதா? என வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டனர். அப்போது அவர்கள் கொடுத்த தகவல்களை பதிவு செய்து கொண்டு பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். உரிய ஆவணம் சமர்பிக்கப்பட்ட பிறகு பணம் திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனை இரவு முழுவதும் விடிய, விடிய நடைபெற்றது. இன்று அதிகாலையில் தான் அவர்கள் சோதனையை நிறைவு செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
தொடர்ந்து செல்லப்பன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? பரிமாற்றம் எந்த அளவிற்கு மேற்கொள்ளப் பட்டுள்ளது? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தேர்தல் நேரத்தில் நிதி நிறுவனர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த லட்சக்கணக்கான பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நாகர். விரைவு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
- வாலிபர் கொலை வழக்கு
நாகர்கோவில் :
நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் டேவிட் (வயது 26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்ற பரம ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திடீரென டேவிட் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இதையடுத்து ராஜனும், ரமேசும், டேவிட்டை பார்த்து வேலைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி வைத்தியநாதபுரம் பகுதியில் கோவில் முன்பு டேவிட் படுகொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து அவரது தாயார் சாந்தி, கோட்டார் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் வைத்தியநாத புரத்தைச் சேர்ந்த ராஜன் என்ற பரம ராஜன் (37), ரமேஷ் (38), கண்ணன் (40),வில்சன்(37) உள்பட 7 பேர் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கைது செய் யப்பட்ட 7 பேரும் ஜாமீனில் விடுதலையான நிலையில் நாகர்கோவில் கூடுதல் விரைவு அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய கண்ணன் பலியானார். இந்த வழக்கு தொடர்பாக 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கில் தொடர்புடைய ராஜன், ரமேஷ், வில்சன் உள்பட 6 பேரும் கோர்ட்டில் ஆஜரா னார்கள்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜன் என்ற பரமராஜன், ரமேஷ், வில்சன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தும் தீர்ப்பில் அவர் கூறி உள்ளார். பரம ராஜன், ரமேஷ், வில்சனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜரானார்.
- நண்பர்களுடன் சென்ற நிதி நிறுவன அதிபரை தாக்கி வழிப்பறி செய்த 5 பேருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
- ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் பாலராஜேஷ் (வயது33). இவர் ஜவஹர் மைதானம் அருகே நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நண்பர்கள் வருண் சுக்ரீத், அபி ஆகியோருடன் சாய்பாபா கோவில் அருகே உள்ள நண்பரின் தோப்புக்கு காரில் சென்றார். சோமையாபுரம் சோதனை சாவடி அருகே அடையாளம் தெரியாத வாலிபர்கள் காரை வழிமறித்து சேதப்படுத்தி பாலராஜேஷ் மற்றும் நண்பர்களை தாக்கி செல்போனை பறித்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் போலீசார் ரோந்து வருவதைக் கண்டதும் அவர்கள் தப்பி விட்டனர். இதுபற்றிய புகாரின்பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் சோமையாபுரத்தைச் சேர்ந்த முத்தையா, ராம்குமார், மாரி செல்வம், வைரமுத்து, கபாலி, கோபாலகிருஷ்ணன் என்ற பீமன் என தெரிய வந்தது. அவர்கள் மீது ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
- சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள கீழ குஞ்சன்விளை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (61). இவர் என்.ஜி.ஓ. காலனியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். முருகேசன் தினமும் காலையில் நிதி நிறுவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு பின்னர் இரவு 8 மணிக்கு வீட்டிற்கு செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று முருகே சன் இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை 3 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து வந்தனர். முருகேசன் வீட்டிற்கு வந்ததும் மோட்டார் சைக்கி ளை நிறுத்தி விட்டு வீட்டிற்கு செல்ல முயன்றார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 3 பேர் கும்பலில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி அவதூறாக பேசி முருகேசனை சரமா ரியாக தாக்கினர். இதில் காயமடைந்த முருகேசன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனால் அங்கிருந்து 3 பேரும் தப்பி சென்றனர். காயமடைந்த முருகேசனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து முருகேசன் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயி லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
- திருப்பூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் ராய பண்டாரம் வீதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன். நிதி நிறுவன அதிபர். இவரது வீட்டுக்குள் கடந்த மாதம் 12-ந் தேதி மதியம் முககவசம் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் சங்கமேஸ்வரன், அவரது மனைவி, மகள் ஆகியோரை கட்டி போட்டு பணம், நகையை கொள்ளையடித்து தப்பினர்.
இது குறித்து வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அபினவ் குமார் மேற்பார்வையில் கொங்கு நகர் உதவி கமிஷனர் அணில் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கில் கொள்ளைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்த திருப்பூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி மருகல் குறிச்சியை சேர்ந்த வானமாமலை (வயது 22), நல்லகண்ணு (21) ஆகியோரை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்